ஆப்நகரம்

அமராவதில் ரூ.150 கோடி செலவில் ஏழுமலையான் கோயில்: கோலாகலமாக நடந்த பூமி பூஜை!

ஆந்திரா மாநிலம் அமராவதியில் ரூ.150 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று கோலாகலமாக நடந்துள்ளது.

Samayam Tamil 1 Feb 2019, 8:55 am
ஆந்திரா மாநிலம் அமராவதியில் ரூ.150 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று கோலாகலமாக நடந்துள்ளது.
Samayam Tamil Finance


நாடு முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் அமைக்கப்பட்டு வருகிறது. அண்மையில், தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையால் கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் மார்ச் மாதம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் ஏழுமலையான் கோயில் திறக்கப்படவுள்ளது.

அதே போன்று ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதில் உள்ள வெங்கடபாளையம் அருகில் ஏழுமலையான் கோயில் கட்ட மாநில அரசு தேவஸ்தானத்திற்கு என்று சுமார் 25 ஏக்கர் கொண்ட நிலத்தை இலவசமாக ஒதுக்கீடு செய்தது. அதில், ரூ.150 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. தற்போது அதற்கான பூமி பூஜை நேற்று கோலாகலமாக நடந்துள்ளது. இதில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு கோயில் கருவறை அமைய உள்ள நிலத்தை ஏர் கலப்பையால் உழுது பின்னர் நவதானியம் விதைத்து பூஜை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூறுகையில், கடந்த 2003ம் ஆண்டு திருமலை மலைப்பாதையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலிருந்து ஏழுமலையான் என்னை காப்பாற்றி மறுஜென்மம் அளித்துள்ளார். அப்போதிலிருந்து நான் தினசரி 10 நிமிடம் ஏழுமலையானை வழிபட்டு வருகிறேன். தற்போது பூஜை நடந்து முடிந்துள்ளது. இதையடுஹ்து அமராவதியில் இன்னும் 2 ஆண்டுகளில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டும் பணி முடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி