ஆப்நகரம்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 8 Jan 2019, 11:42 pm
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil Kerala


கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கூட்டாலுமூடு வழியாக கேரளாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இதனை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டாக பல முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். வரும் நிலையில் இன்று கூட்டாலுமூடு பகுதியில் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்ததில் அதில் கேரளாவிற்கு கொண்டு செல்ல இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்த அபிலாஷ், பிபின் ஆகியோரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி