ஆப்நகரம்

தரம் குறைந்த பழச்சாறை விற்பனை செய்தவருக்கு ஓராண்டு சிறை!

தரக்குறைவான பழச்சாறை விற்பனை செய்தவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

Samayam Tamil 13 Oct 2018, 12:26 pm
Read In English: In MP, juice seller gets rigorous imprisonment for using poor quality fruits
Samayam Tamil தரக்குறைவான பழச்சாறை விற்பனை செய்தவருக்கு ஓராண்டு சிறை!
தரக்குறைவான பழச்சாறை விற்பனை செய்தவருக்கு ஓராண்டு சிறை!


மத்திய பிரதேச மாநிலத்தில் தரக்குறைவான பழங்களை பயன்படுத்தி, ஜூஸ் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், ஹபிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பீரித்தம் சிங்(43). இவர் ஹபிப்கஞ்ச் கிராஸிங் பகுதியில் கல்சா ஜூஸ் செண்டர் என்ற பெயரில் பழச்சாறு விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

இங்கு கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், உணவு இன்ஸ்பெக்டர் போஜ்ராஜ் சிங் தகத் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு விற்பனை செய்த அண்ணாச்சி பழச்சாற்றில் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பீரித்தம் சிங் மீது, உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த முதன்மை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் உய்கே, குற்றவாளி பீரித்தம் சிங்குக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இதுபோன்ற தரக்குறைவான பழச்சாறுகளை விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்துக்கு பாதகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

அடுத்த செய்தி