ஆப்நகரம்

மூடநம்பிக்கையால் சொந்த மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

தனக்கு கெட்ட நேரம் கொண்டு வந்ததாக கூறி பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

Samayam Tamil 11 Feb 2019, 12:30 pm
தனக்கு கெட்ட நேரம் கொண்டு வந்ததாக கூறி பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
Samayam Tamil download (4)


மும்பையில் உள்ள மஹிம் பகுதியை சேர்ந்தவர் இலியாஸ் சயீத். 36 வயதாகும்சயீதுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தனது மனைவி டெனிஷா மற்றும் இரண்டாது மகள் ஆலியாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க ஒட்டுமொத்த வீட்டையே தீயிட்டு கொளுத்த சயீத் மற்றும் அவரது காதலியான ஆப்ரின் பனோ திட்டம் தீட்டியுள்ளனர்.

சயீத் கடந்த மூன்று ஆண்டுகளா ஆப்ரின் பனோ என்ற பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் சயீத்யின் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இரண்டவது குழந்தை ஆலியாவால் தான் தனக்கு இந்த நஷ்டம் ஏற்படுவதாக நினைத்த சயீத் , அலியாவையும் அவரது மனைவியையும் சேர்ந்து கொன்றுள்ளார். இருவரையும் கொன்றுவிட்டு வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவரது காதலி ஆப்ரின் பனோவிற்கு நடந்த சம்பவத்தை கூறிய சயீத், வீட்டையே எரித்து விடுமாறு கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து வீட்டுக்கு சென்றஆப்ரின் இருவரின் உடலையும் எரிக்க மண்ணெணையை தேடியுள்ளார். ஆனால் மண்ணெணை கிடைக்காததால் சமயல் எண்ணெய்யை ஊற்றி எரிக்க முயன்ற அவர் சட்டென்று பயந்து வெளியில் வந்துவிட்டார். திடீரென்று அவரது வீட்டில் இருந்து புகை வந்ததால் அக்கம்பக்த்தினர்காவல்துறையினருக்கும் , சயீதுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்றவிசாரணையில் சயீத் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டர். இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி