ஆப்நகரம்

ஏழைகளின் பசியைப் போக்கும் இந்திய ரயில்வே

கொரோனா வைரஸ் பெருந்தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், இந்த உத்தரவினால் உணவுக்குக் கூட வசதியில்லாமல் ஏராளமான ஏழை மக்கள் இருக்கிறார்கள்.

Samayam Tamil 22 Apr 2020, 6:34 pm
கொரோனா வைரஸ் பெருந்தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், இந்த உத்தரவினால் உணவுக்குக் கூட வசதியில்லாமல் ஏராளமான ஏழை மக்கள் இருக்கிறார்கள்.
Samayam Tamil in times of crisis indian railways feeds indias poor
ஏழைகளின் பசியைப் போக்கும் இந்திய ரயில்வே



இந்திய ரயில்வே

இந்தச் சூழலில் மக்களுக்கு உதவு முன்வந்த இந்திய ரயில்வே நிர்வாகம் 20 லட்சம் உணவுப் பொட்டலங்களுக்கு மேல் இலவசமாக விநியோகம் செய்துள்ளது.

​இரண்டு வேளை சாப்பாடு

மார்ச் 28ஆம் தேதி முதல் மதியமும் இரவும் இரண்டு வேளை உணவு விநியோகிக்கப்படுகிறது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் உதவியுடன் தேவையானவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது.

யாருக்கு?

தினக்கூலி தொழிலாளர்கள், வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்தவர்கள், வீடில்லாதவர்கள், அகதிகள், ஆதாரவற்றர்கள் மற்றும் வறுமையில் வாடும் மக்களைக் கண்டறிந்து உணவு விநியோகிக்கப்படுகிறது.

​சமூக விலகல்

உணவைப் பெற வருபவர்கள் போதிய இடைவெளி விட்டு நின்று சமூக விலகலைக் கடைபிடிப்பது உறுதி செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி