ஆப்நகரம்

துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது விபரீதம்: தந்தையால் 2 வயது மகள் உயிரிழப்பு

உரிமம் பெற்ற துப்பாக்கியை ஒருவர் சுத்தம் செய்த போது, அவரது இரண்டு மகள் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த சமப்வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Feb 2019, 10:49 pm
உரிமம் பெற்ற துப்பாக்கியை ஒருவர் சுத்தம் செய்த போது, அவரது இரண்டு மகள் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த சமப்வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தந்தை தவறுதலாக சுட்டதால் 2 வயது குழந்தை மரணம்


இதுதொடர்பாக போலீசார் அளித்த தகவலின் படி, காஸியாபாத்தை சேர்ந்த விகாஸ் ஷர்மா என்பவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை கடந்த ஓராண்டாக பயன்படுத்தி வருகிறார். அப்போது துப்பாக்கியில் குண்டுகள் இல்லை என்ற புரிதலில், மகள் அருகில் இருக்க அவர் சுத்தம் செய்யும் பணியில் இருந்துள்ளார்.

அப்போது தவறுதலாக கையாளும் போது, மகள் மீது குண்டு பாய்ந்துவிட்டது. பதறிய அவர், உடனே மகளை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பிறகு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விகாஸியின் 2 வயது மகள் செவ்வாய்கிழமை காலை 4 மணியளவில் உயிரிழந்து விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். அப்போது பேசிய அவர்கள், விகாஸ் ஷர்மாவின் துப்பாகிக்கான உரிமம் ரத்து செய்யப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

அடுத்த செய்தி