ஆப்நகரம்

கையெழுத்தானது வரலாற்றுச் சிறப்புமிக்க சாப்ஹார் துறைமுக ஒப்பந்தம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சாப்ஹார் துறைமுக ஒப்பந்தம் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் இந்தியா - ஈரான் இடையே கையெழுத்தானது.

TOI Contributor 23 May 2016, 2:33 pm
தெஹ்ரான் (ஈரான்): வரலாற்றுச் சிறப்புமிக்க சாப்ஹார் துறைமுக ஒப்பந்தம் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் இந்தியா - ஈரான் இடையே கையெழுத்தானது.
Samayam Tamil including chabahar 12 mou inked between india iran
கையெழுத்தானது வரலாற்றுச் சிறப்புமிக்க சாப்ஹார் துறைமுக ஒப்பந்தம்


பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஈரான் நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டு நிதியமைச்சர் அலி தய்யேபினியா வரவேற்றார்.

அந் நாட்டில் உள்ள சீக்கிய குருத்வாராவில் வழிபாடு நடத்திய மோடி, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு என பல்வேறு முக்கிய நிகழ்சிகளில் கலந்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானியை சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், கடந்த ஜனவரி மாதம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சாப்ஹார் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. பாகிஸ்தானின் குவாதர் நகரில் சீன அரசு மிகப்பெரிய துறைமுகத்தை அமைத்து வருகிறது. எனவே அதற்குப் போட்டியாக குவாதரில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்க இந்தியா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது அவர்கள் முன்னிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சாப்ஹார் துறைமுக ஒப்பந்தம் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடல் மார்க்கமாக ஆப்கானிஸ்தான், கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தை இந்தியாவால் அதிகரிக்க முடியும்.

மேலும், இந்தியா - ஈரான் கலாச்சார பரிமாற்ற திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பு, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீட்டில் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு என்பன உள்ளிட்ட மொத்தம் 12 ஒப்பந்தங்கள் இந்தியா - ஈரான் இடையே கையெழுத்தானது.

ஒபந்த கையெழுத்தை தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, இந்தியாவும், ஈரானும் புதிய நண்பர்கள் அல்ல. பல நூற்றாண்டுகளாக கலை, வர்த்தகம், கட்டமைப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பலவற்றில் நமது சமூகம் இணைந்து செயலாற்றி வருகிறது. குஜராத் பூகம்பத்தின் போது ஈரான் செய்த உதவிகளை மறக்க முடியாது. இன்று கையெழுத்தான ஒப்பந்தகள், வரலாற்றில் இரு நாட்டு உறவுகளுக்கான புதிய அத்யாயத்தை தொடங்கும் விதமாக அமையும். சாப்ஹார் துறைமுக ஒப்பந்தம் மற்றும் அது தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தங்கள் முக்கியமான மைல்கல். தீவிரவாத அச்சுறுத்தல், இணைய குற்றம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட விஷயங்களில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

சாப்ஹார் துறைமுக ஒப்பந்தம் மூலம், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தியா இடையே ஓர் இணைப்பு ஏற்படும். இந்த சந்திப்பில், சுற்றுலா தொடர்பான விஷயங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூட்டு சந்திப்பில் பேசிய ஈரான் அதிபர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி