ஆப்நகரம்

கருப்புப் பணம் பற்றி தகவல் தந்தால் ரூ. 1 கோடி சன்மானம்: வருமான வரித்துறை அறிவிப்பு

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பினாமி சொத்துக்கள் பற்றி தகவல் தந்தால் 1 கோடி ரூபாய் வரையில் சன்மானம் வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 Jun 2018, 2:36 pm
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பினாமி சொத்துக்கள் பற்றி தகவல் தந்தால் 1 கோடி ரூபாய் வரையில் சன்மானம் வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil income tax dept



மத்திய வருமான வரித்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு:

கருப்புப்பணத்தை ஒழிக்கும் முயற்சியில் மக்களின் பங்கு இருக்க வேண்டும் என்ற வகையில் ‘பினாமி சொத்துக்கள் பரிவர்த்னை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி திட்டம் 2018’ என்ற தலைப்பில் வருமானவரித்துறை புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.
கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள், பினாமி சொத்துக்கள், சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை, பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் அளிக்க பொதுமக்களை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அதன்படி, முறைகேடான பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதி உண்டு.
இவ்வாறு வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் வெளியிடப்படாது. இந்த வெகுமதி திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

https://www.incometaxindia.gov.in/news/letter-it-informants-rewards-scheme-1-5-18.pdf

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி