ஆப்நகரம்

ரூ.1000 கோடி சொத்து சேர்த்த விவகாரம்; லாலு மனைவியிடம் வருமான வரித்துறை விசாரணை...!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில், லாலு மனைவியிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

TNN 30 Aug 2017, 6:55 am
பாட்னா: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில், லாலு மனைவியிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Samayam Tamil income tax department questions rabri devi
ரூ.1000 கோடி சொத்து சேர்த்த விவகாரம்; லாலு மனைவியிடம் வருமான வரித்துறை விசாரணை...!


டெல்லி மற்றும் பீகார் மாநிலத்தில் ரூ.1000 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி, மகள்கள் சந்தா, ராகினி, மிசா பாரதி எம்.பி., மருமகன் சைலேஷ்குமார் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணையில் இறங்கினர். இதுகுறித்து மிசா பாரதி, அவருடைய கணவர் சைலேஷ்குமார் ஆகியோரிடம் முன்னதாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் லாலு மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வியை நேரில் நேற்று ஆஜராகும்படி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாட்னா வருமான வரித்துறை அலுவலகத்தில் இருவரும் ஆஜராகினர்.

அப்போது அவர்களிடம் ரூ.1000 கோடி பினாமி சொத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பிற நபர்களிடமும் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியிலும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதால், பாட்னா வருமான வரித்துறை அதிகாரிகளுடன், டெல்லி அதிகாரிகளும் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

Income Tax department questions Rabri Devi, Tejashwi Yadav in benami case.

அடுத்த செய்தி