ஆப்நகரம்

ரூ.1,316 கோடி சொத்து விவகாரம்: வருமான வரித்துறை கண்காணிப்பில் மாயாவதி சகோதரர்

ரூ.1,316 கோடி சொத்து சேர்த்த விவகாரத்தில், மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார் வருமான வரித்துறை கண்காணிப்பில் உள்ளார்.

TNN 10 Jan 2017, 4:46 pm
லக்னோ: ரூ.1,316 கோடி சொத்து சேர்த்த விவகாரத்தில், மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார் வருமான வரித்துறை கண்காணிப்பில் உள்ளார்.
Samayam Tamil income tax dept will start investigate mayawathi brother regarding rs 1316 crore property
ரூ.1,316 கோடி சொத்து விவகாரம்: வருமான வரித்துறை கண்காணிப்பில் மாயாவதி சகோதரர்


உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவருமாக பதவி வகித்து வருபவர் மாயாவதி. அவரது சகோதரர் ஆனந்த்குமார் பிரபல தொழிலதிபராக விளங்கி வருகிறார். அவர் குறுகிய காலத்தில் ரூ.1,316 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாயாவதி 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்துள்ளார். அந்த காலகட்டத்தில் மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமாரின் சொத்து மதிப்பு ரூ.7.5 கோடியாக இருந்தது. ஆனால் அதன்பிறகு சொத்து மதிப்பு ரூ.1,316 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஆனந்த்குமார் வாங்கியுள்ள கடன் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Income Tax dept will start investigate Mayawathi brother regarding Rs.1316 crore property.

அடுத்த செய்தி