ஆப்நகரம்

சபரி மலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்: பெண்கள் நுழைவை தடுக்க கண்காணிப்பு!

கார்த்திகை மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து சபரிமலைக்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்துவருகிறது. அதே நேரத்தில் பெண்கள் செல்வதை தடுக்கவும் தீவிர சோதனை நடைபெற்றுவருகிறது.

Samayam Tamil 18 Nov 2019, 10:24 am
சபரி மலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடைதிறக்கப்பட்டது. இதனால் சபரி மலைக்கு செல்லும் கூட்டம் அதிகரித்துள்ளது.
Samayam Tamil சபரி மலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்


சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..!

நேற்று கார்த்திகை 1 என்பதால் அதிகாலை நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள் கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன.

''ஐயப்பா ஐயப்பா'' என்ற பக்தி கோஷங்களுடன் நடை திறப்பு..!

அதே சமயம் சபரி மலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற பழைய உத்தரவு தொடர்கிறது.

இருப்பினும் கேரள மாநில அமைச்சர் சுரேந்திரன், “சபரிமலைக்கு வரும் எந்த பெண்களுக்கும் கேரள மாநில அரசு பாதுகாப்பு தர இயலாது. திருப்தி தேசாய் போன்ற சமூக ஆர்வலர்கள், தங்களது வலிமையை காட்டுவதற்கான இடம் சபரிமலை அல்ல” என்று கூறினார்.

முதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர்சனம்

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தேவசம் போர்டும் பெண்கள் சபரி மலைக்கு வருவதை தடுக்கும் விதமாக பம்பை பகுதியிலேயே கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி