ஆப்நகரம்

எல்லைகளில் சுதந்திர தினம்... நெகிழவைக்கும் படங்கள்

இந்தியாவின் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் பலரும் சுதந்திர தினம் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Samayam Tamil 15 Aug 2020, 4:00 pm
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுக்க வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநிலங்களில் மாநில முதல்வர்கள் கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றி உரையாற்றினர். மேலும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிநபர் இடைவெளியுடன் தேசியக் கொடியேற்றி சுதந்திர தின விழாக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் பலரும் சுதந்திர தினம் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Samayam Tamil independence day celebration at indian border areas
எல்லைகளில் சுதந்திர தினம்... நெகிழவைக்கும் படங்கள்


அட்டாரி-வாகா எல்லை

பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி வாகா எல்லையில், இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் கொடியேற்றினார்.

இந்தியா - வங்கதேச எல்லை

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்திய-வங்கதேச எல்லையான புல்பாரி எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மேற்கு வங்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

நாடுகளுக்கிடையிலான நல்லுறவு வலுப்படுகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக நடந்த இந்த நிகழ்வு பலர் மனதிலும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

16000 அடி உயரத்தில்

லடாக்கில் உள்ள இந்தோ திபெத்திய எல்லைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 16000 அடி உயரத்திற்கு மேல் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் சுதந்திர தினத்தை மூவர்ணக் கொடியேந்தியபடி அணிவகுத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பாங்கோங் ஆற்றங்கரையில்

கடல் மட்டத்திலிருந்து 14000அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள பாங்கோங் ஆற்றங்கரையில் இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.

ஆற்றின் எல்லையில் நின்றபடி, மூவர்ணக்கொடியை கம்பீரமாக ஏந்தியபடி சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

17000 அடி உயரத்தில்

லடாக் எல்லையில், சுமார் 17000அடி உயரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர்.

தேசியக் கொடியைத் தாங்கியபடி அணிவகுப்பாக நடந்து சென்று எல்லையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம் காண்போரை நெகிழச் செய்தது.

அடுத்த செய்தி