ஆப்நகரம்

பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளனும்...மோடியிடம் சொன்ன ட்ரம்ப்

ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் தலைவலியாக உள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

Samayam Tamil 22 Sep 2019, 11:58 pm
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி லிளையாட்டாரங்கில் "ஹவுடி மோடி" நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் வரவேற்பை ஏற்று, அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த பிரமாண்ட அரங்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியது:
Samayam Tamil mt

உலகின் மிகச் சிறந்த தலைவரும், எனது நண்பருமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.

எங்களது இருவரின் தலைமையில் இந்திய -அமெரிக்க உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்தியா, வெள்ளை மாளிகையுடன் இந்த அளவு நட்ப பாராட்டியிருக்காது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

நரேந்திர மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. அவரது தலைமையிலான இந்திய அரசின் சிறந்த நிர்வாகத்தை அமெரிக்கா மனதார பாராட்டுகிறது. மோடி தலைமையிலான ஆட்சியில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுப்பட்டுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பு என்பது இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இதை உணர்ந்து பயங்கரவாதிகளிடமிருந்து தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

குறிப்பாக, இஸ்லாமிய ப.யங்கரவாதத்தை வேரறுக்க வேண்டிய அவசியம் இரு நாடுகளுக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பும் மேலும் பலப்படுத்தப்படும்.

விண்வெளித் துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. உலகப்புகழ் பெற்ற என்பிஏ கூடைப்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்படும்.

இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்காவின் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இநதியர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்த மேடையில் பேசுவதற்கான வாய்பபை ஏற்படுத்தி தந்ததற்காக மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இருநாட்டு மக்களையும் ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும் என, டொனால்ட் ட்ரம்ப் உணர்ச்சி பொங்க பேசினார்.

அடுத்த செய்தி