ஆப்நகரம்

Border: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... இந்தியா மாஸ்டர் பிளான்!

எல்லைப் பகுதியில் மணாலி முதல் லே வரை சாலைக் கட்டமைப்பு பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

Samayam Tamil 19 Aug 2020, 6:33 pm

இந்தியா, சீனா இடையே கடந்த மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், சீனா ஒத்துழைக்க மறுப்பதாக இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
Samayam Tamil லடாக்


ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், “பாகிஸ்தான் எல்லை முதல் சீனா எல்லை வரை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மையை குறைத்தவர்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே நமது பாதுகாப்பு படையினர் பதிலளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

Border: சரி இந்தியாவுக்கு ஒத்துழைக்கிறோம் - சீனா சரண்டர்!

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையிலும், சீன எல்லையிலும் எதிர் ராணுவத்தினருக்கு தெரியாமல் ராணுவ வாகனங்களையும், வீரர்களையும், பீரங்கிகளையும் கொண்டுவருவதற்காக மணாலி முதல் லே வரை புதிய சாலைக் கட்டமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எல்லைப் பகுதியில் உள்ள உயரமான மலைப் பகுதிகளுக்கு விரைந்து பயணிக்க முடியும்.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில், “மணாலி முதல் லே வரை நிமு, படாம், தர்ச்சா வழியே போக்குவரத்து கட்டமைப்பு ஏற்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. இதில், தற்போது பயன்படுத்தப்படும் ஷொஜிலா கணவாய் வாயிலான வழியும் உள்ளடங்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

இப்புதிய உள்கட்டமைப்பு மூலம் மணாலி முதல் லே வரை பயணிக்க மூன்று மணி நேரம் சேமிக்கப்படும். இத்திட்டத்திற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோக எல்லையில் மற்ற இடங்களிலும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்திய அரசு பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது.

அடுத்த செய்தி