ஆப்நகரம்

தேசிய விளையட்டு தினம்: ஒரு பார்வை

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 29 Aug 2018, 11:36 am
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாககொண்டாடப்படுகிறது.
Samayam Tamil national-sports-day


ஹாக்கி விளையாட்டில் சாதனை படைத்த தயான்சந்த்நினைவாக அவரின் பிறந்த தினத்தை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகின்றனர்.
ஒவ்வொரு நாடும் தேசிய விளையாட்டு தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுவார்கள் . இன்றைய தினத்தில் எல்லா பள்ளி, கல்லூரிகளில் கூடை பந்து போட்டிகள், தடகள போட்டிகள் என்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

அந்தவகையில், இன்று ராஷ்டிர பவனில், சாதனைபடைத்தவிளையாட்டு வீரர்களை பெருமைபடுத்தும் வகையில் உயரிய விருதான அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோனாசாரியார் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதைஇந்திய குடியரசுத்தலைவர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவார்.


இந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்கள் வென்றுள்ளனர்.இதுவரை 9 தங்கப் பதக்கம்19 வெள்ளி பதக்கம் மற்றும் 22 வெண்கலப் பதக்கம், மொத்தம் 50 பதக்கங்கள் வென்று, பதக்கப்பட்டியலில்இந்தியா8 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிஇந்திய மக்கள் அனைவருக்கும் தேசிய விளையட்டு தினத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்த வாழ்த்து செய்தியில் ‘இந்தியா சார்பாக இதுவரை விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் அனைவரையும் தலைவணங்குகிறேன். இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்றுள்ளனர். என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி