ஆப்நகரம்

வெட்கமா இல்ல, பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்: என்ன நடக்குது எல்லையில்?

ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அந்நாட்டு தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 Nov 2020, 6:43 am
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் தவார், கேரான், உரி மற்றும் நவ்காம் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது.
Samayam Tamil india pakistan


இதில், 4 ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் 6 பேர் என மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதில் தாக்குதலில், பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். அதன் முகாம்கள், தீவிரவாதிகள் பதுங்கு அரண்கள் ஆகியவை தரைமட்டமாக்கப்பட்டன.

இந்நிலையில், எல்லையில் வசிக்கும் அப்பாவி மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாகிஸ்தான் தூதரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘கைகள் வலிக்கும்... ஆனாலும் சுகமே’: சூரர்களைப் போற்றுவோம்!

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அமைதியை சீர்குலைப்பதற்கும், வன்முறையை தூண்டுதவற்கும் ஆயுதங்களையும், பீரங்கிகளையும் பயன்படுத்துவற்கு பண்டிகை தருணத்தை பாகிஸ்தான் தேர்வு செய்திருப்பது வெட்ககேடானது,” என கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லை தாண்டிய தீவிரவாத ஊடுருவலுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கும் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

சபரிமலை நடைதிறப்பு: ஐய்யப பக்தர்கள் இத கொண்டு போக மறந்துடாதீங்க!

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டில் மட்டும் 4,052 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.அக்டோபரில் 394 முறையும், நவம்பரில் 128 முறையும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அது 3,233 முறை தாக்குதல் நடத்தியது.

அடுத்த செய்தி