ஆப்நகரம்

சீன எல்லையில் ராணுவத்தினரை அதிகப்படுத்திய இந்தியா; இனி சண்ட தான் பாக்கி...!

சீன எல்லைப் பகுதியான சிக்கிம், அருணாசலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

TNN 12 Aug 2017, 7:58 am
டெல்லி: சீன எல்லைப் பகுதியான சிக்கிம், அருணாசலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil india deploys more troops along china border
சீன எல்லையில் ராணுவத்தினரை அதிகப்படுத்திய இந்தியா; இனி சண்ட தான் பாக்கி...!


இந்திய - பூடான் - சீன எல்லையான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை சீன ராணுவத்தினர் மேற்கொண்டனர். இதனை இந்திய வீரர்கள் தடுத்ததால், ஏராளமான பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.

இதையடுத்து அப்பகுதியில் 350 இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் ஜூன் 16ஆம் தேதி முதல், தொடர்ச்சியாக 8 வாரங்கள் சீன வீரர்களின் செயல்பாட்டை தடுத்து வருகின்றனர். இதனால் இந்திய-சீன எல்லைப் பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இருநாட்டு எல்லைப் பகுதியிலும் ராணுவ வீரர்கள் படிப்படியாக அதிகப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிக்கிம் முதல் அருணாசலப் பிரதேசம் வரையிலான 1,400 கி.மீ தூர இந்திய எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதி முழுவதிலும் ராணுவ வீரர்களை அதிகப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுதொடர்பான எண்ணிக்கை விவரங்களை அளிக்க ராணுவ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ராணுவ வீரர்கள் அனைவரும் 9,000 அடி உயர எல்லைப் பகுதியில், 14 நாட்கள் தயார்நிலை செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

India deploys more troops along China border in Sikkim, Arunachal.

அடுத்த செய்தி