ஆப்நகரம்

மத வெறியர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய அரசு- அமெரிக்க அரசு அறிக்கை

முன்னதாக சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்தியதற்காக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை சார்ந்த மாணவர்களை பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தாக்கிய சம்பவம் மோடியின் கடந்தகால ஆட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் தற்போது அமெரிக்க மாநிலத் துறை இந்தியாமீது ஓர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Samayam Tamil 23 Jun 2019, 1:23 pm
அமெரிக்க காங்கிரஸிடம் வருடாவருடம் அமெரிக்க மாநிலத் துறையால் ஒர் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். சர்வதேச அளவில் உலக நாடுகளில் மத சுதந்திரம் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும் அறிக்கை அது. அந்த அறிக்கை அவர்களது அதிகாரப் பூர்வ இணைய தளத்திலும் வெளியாகும்.
Samayam Tamil bharatiya-janata-party-flags-500x500 BJP


இந்நிலையில் தற்போது அமெரிக்க மாநிலத் துறை இந்தியாமீது ஓர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதன்படி இந்திய சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்து தீவிரவாத கும்பல் இன்று சிறுபான்மையினர்மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியது என குற்றஞ்சாட்டியுள்ளது.

இக்குற்றச்சாட்டினை இந்தியா அடியோடு மறுத்துள்ளது. பசு பாதுகாவலர்காள் என்ற போர்வையில் தலீத் மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் இந்தியாவில் அடிக்கடி நடந்தவண்ணமே உள்ளன. இதுபோன்று பசு பாதுகாவலர்கள் என்கிற போர்வையில் கொலை வெறித் தாக்குதல் நடத்துபவர்கள்மீது இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியது அமெரிக்க அறிக்கை.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ‘இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமமாக மதிக்கப்படுகின்றனர். அவர்கள் ஒன்றுமையுடன் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்து வருகின்றனர். தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் சட்டம் அவர்களை தண்டிக்கத் தவறுவதில்லை. அமெரிக்க அறிக்கையை நாங்கள் அடியோடு மறுக்கிறோம். இது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரை விளைவிக்கும் என்றுள்ளார்.

முன்னதாக சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்தியதற்காக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை சார்ந்த மாணவர்களைத் தாக்கியதாக இருக்கட்டும், ராஜஸ்தானில் மாடுகள் வாங்கப்போன தமிழக கால்நடைத்துறை அதிகாரிகளையும், ஓட்டுநர்களையும் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தாக்கியதாக இருக்கட்டும் இவை அனைத்துமே மோடியின் கடந்தகால ஆட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. கேரள அரசு இறைச்சிக்காக மாடுகளைச் சந்தையில் விற்க மோடி அரசு விதித்த தடைக்கு எதிராக தீவிரமாக எதிர்ப்புக் குரல் எழுப்பியதும் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி