ஆப்நகரம்

தொழில் செய்வது எளிமை; சுயதொழில் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்!

புதுடெல்லி: இந்தியா மிகப்பெரிய சமூக, பொருளாதார மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Oct 2018, 7:44 pm
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil Modi


பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய திரைப்பட தணிக்கைத் துறை சார்பில் பல்துறை வளர்ச்சி குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை மோடி கண்டு ரசித்தார்.

இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. இதனால் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டில் வரி கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில் செய்வதை எளிமையாக்கி உள்ளோம். வங்கி அமைப்புகள் வலிமைபடுத்தப் பட்டுள்ளது என்று கூறினார். இந்த மாநாடு மூலம் ரூ.70,000 கோடி முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India going through major transformation says Narendra Modi.

அடுத்த செய்தி