ஆப்நகரம்

துவம்சம் செய்த பெருமழை; அதுக்குள்ள 120% பொழிவு - ஆச்சரியத்தின் விளிம்பில் இந்தியா!

நாடு முழுவதும் ஆச்சரியப்படும் வகையில் அதிகப்படியான மழை பெய்திருக்கிறது. இதுகுறித்து விரிவான செய்தியை இங்கே காணலாம்.

Samayam Tamil 20 Jan 2020, 11:06 am
வழக்கமாக ஜனவரி மாதத்தில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்கள் மழையின்றி காணப்படும். இந்த சூழலில் மணிப்பூரில் நடப்பாண்டில் இதுவரை 1603 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
Samayam Tamil Rain9


இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரம் வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் 120 சதவீத அளவிற்கு அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது.

கடவுளே கேட்டாலும் மன்னிக்க மாட்டேன்; கோபத்தின் உச்சியில் நிற்கும் நிர்பயா தாய்!

உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இயல்பை விட 300 சதவீதம் அதிக மழையை பெற்றுள்ளன. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 670 சதவீதமும், மிசோரத்தில் 295 சதவீதமும் மழையை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறுகையில், பல்வேறு மாநிலங்களில் இயல்பை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக மழை பெய்துள்ளது.

தப்பு பண்ணிட்டீங்களே கேரள மக்களே; இப்படியொரு அதிர்ச்சி தந்த ராமச்சந்திர குகா!

இதில் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி மாநிலங்கள் பெருமளவு மழையை பெற்றுள்ளன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக வட இந்தியாவில் குளிர்கால மழை பெய்வது வழக்கம்.

நடப்பாண்டில் இதுவரை 4 முறை காற்றழுத்த சூழல் உருவாகியுள்ள நிலையில், ஜனவரி மாத இறுதிக்குள் 8 காற்றழுத்த சூழல்கள் உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

24x7 திறந்திருக்கும் மால்கள், உணவக விடுதிகள், மல்டிபிளக்ஸ்கள் - மாநில அரசு அதிரடி!

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவோ அல்லது கன மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதன்மூலம் தலைநகர் டெல்லியில் இரவு நேரங்களில் லேசான மழையோ, சாரல் மழையோ அல்லது மேகமூட்டத்துடனோ காணப்படும்.

ஜனவரி 19ஆம் தேதி வரை டெல்லி 17.5 மிமீ மழையை பெற்றுள்ளது. வழக்கமாக 8.2 மிமீ மழை மட்டும் பெறும் நிலையில், இம்முறை 114 சதவீதம் அதிகம் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி