ஆப்நகரம்

குடியரசு தின விழா: இங்கிலாந்து பிரதமருக்கு இந்தியா அழைப்பு!

குடியரசு தின விழாவுக்கான விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2020, 7:10 pm

2021ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் போரிஸ் ஜான்சனை தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவருக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil போரிஸ் ஜான்சன் - மோடி


நவம்பர் 17ஆம் தேதியன்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு பேசினார். அப்போது, கோவிட்-19 கொள்ளை நோய், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய அரசு வெளியிட்டிருந்த குறிப்பில், “கோவிட்19 காலத்துக்கும் பின், பிரெக்ஸிட்டுக்கு பின் இந்தியா-இங்கிலாந்து உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் தங்களது விருப்பத்தை மீண்டும் தெரிவித்துக்கொண்டனர்.

கொரோனா முகக்கவசம் அணியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு!

வணிகம், முதலீடு, அறிவியல் ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூட்டணியை வலுப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சன் விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என நவம்பர் மாதமே இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் ஜேன் தாம்சன் தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பால் கடந்த பல ஆண்டுகளாக உலக தலைவர்கள் மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட்டிருந்தது. கடைசியாக இந்தியாவுக்கு பிப்ரவரி மாதத்தில் மியான்மார் அதிபர் வின் மியிண்ட் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதே போல பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்தியா வந்திருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு குடியரசு தின விழாவுக்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவிருக்கிறார்.

அடுத்த செய்தி