ஆப்நகரம்

சீண்டுனா! அப்புறம் சின்னாபின்னமா ஆயிடுவீங்க; சீனாவை எச்சரிக்கும் ராணுவ தளபதி!

இந்தியா பலவீனமான நாடல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

TNN 12 Jan 2018, 4:30 pm
டெல்லி: இந்தியா பலவீனமான நாடல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil india is not the weak country says army chief bipin rawat
சீண்டுனா! அப்புறம் சின்னாபின்னமா ஆயிடுவீங்க; சீனாவை எச்சரிக்கும் ராணுவ தளபதி!


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத், சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடல்ல.

எல்லையில் வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். எத்தகைய ராணுவத்தையும் எதிர்க்கும் வல்லமை இந்திய ராணுவத்திற்கு உள்ளது.

பாகிஸ்தான் அளித்த நிதியுதவி அனைத்தும் வீண் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. உடனடியாக நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா, தீவிரவாதத்திற்கு அடைக்கலம் அளிக்கும் போக்கிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் செயல்பாட்டை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வேதியியல், உயர் வேதியியல், அணு ஆயுதங்கள் ஆகிய வடிவங்களில் அச்சுறுத்தல்கள் வருகின்றன.

இதனால் தொழில்நுட்பத்தை மேம்படுத்தல், வீரர்களுக்கு நவீன பயிற்சி அளிப்பதே சிறந்த வழி என்று பிபின் ராவத் தெரிவித்தார்.

India is not the weak country says Army Chief Bipin Rawat.

அடுத்த செய்தி