ஆப்நகரம்

2019ல் இந்தியா தான் உலகின் முதல் எல்.ஈ.டி தேசம்: மத்திய அமைச்சர்

எல்.ஈ.டி பல்பு பயன்படுத்துவதில் 2019 ஆம் ஆண்டில் இந்தியா தான் உலகின் முதல் தேசமாக திகழும் என்று மின்சக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

TOI Contributor 16 Aug 2017, 10:37 pm
2019 ஆம் ஆண்டில் இந்தியா தான் உலகின் முதல் எல்.ஈ.டி தேசமாக திகழும் என்று மின்சக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
Samayam Tamil india may become 1st nation using led for all lights by 2019 piyush goyal
2019ல் இந்தியா தான் உலகின் முதல் எல்.ஈ.டி தேசம்: மத்திய அமைச்சர்


சாதரணமாக நாம் பயன்படுத்தும் மற்ற பல்பு வகைகளைக் காட்டிலும், எல்.ஈ.டி பல்புகள் அதிக ஆயுட்காலமும், மின்சாரத்தை குறைவாக எடுத்துக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.

மின்சேமிப்பைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் எல்.ஈ.டி பல்புகள் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும், திட்டங்களையும் ஏற்படுத்தி வருகிறது.



இந்நிலையில் 53,500 பெட்ரோல் பங்க்குகளில் எல்.ஈ.டி பல்புகள், மின்விசிறி, போன்ற மின்சாதனங்களை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தினால் ஆண்டிற்கு சுமார் 40,000 கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்றும் இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பியூஸ் கோயல், 2019 ஆண்டில் இந்தியா முழுவதும் எல்.ஈ.டி பல்புகள் மட்டும் தான் பயன்பாட்டில் இருக்கும் என்றும் இதன் மூலம் இந்தியா தான் உலகின் முதல் எல்.ஈ.டி தேசமாக வரலாற்று சாதனை படைக்கும் என்றும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகையில், பெட்ரால் பங்க்குகள் அனைறத்தும் பொதுசேவை மையமாக மாற்றப்படும் என்றும் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்தியா, எல்.ஈ.டி, எரிசக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயல், முதலிடம், Piyush GoyalLED, tubelightLED, bulbs, IndianOil, Indian, Bank, Dharmendra Pradhan, CSC

அடுத்த செய்தி