ஆப்நகரம்

அடுத்த கொரோனா அலை.. விளிம்பில் நிற்கும் இந்தியா.. மக்களே உஷார்!

கொரோனாவின் இரண்டாம் அலையின் விளிம்பில் இந்தியா இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Samayam Tamil 20 Feb 2021, 11:17 pm
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது.
Samayam Tamil covid


மகாராஷ்டிராவில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால்தான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. மும்பை, விதர்பா ஆகிய பகுதிகளில் புதிய கொரோனா பரவுவது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இனி எல்லாரும் 2 மாஸ்க் போடணுமாம்.. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் திருப்பம்!
கடந்த சில மாதங்களால தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. நேற்று நாடு முழுவதும் 13,993 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பிப்ரவரி 16ல் 9121, பிப்ரவரி 17ல் 11610, பிப்ரவரி 18ல் 12881, பிப்ரவரி 19ல் 13193, பிப்ரவரி 20ல் 13993 என்ற வேகத்தில் கொரோனா பாதிப்பு தேசிய அளவில் உயர்ந்து வருகிறது.

கடைசியாக செப்டம்பர் 17ஆம் தேதியன்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 97,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியா தொட்ட உச்சம் இதுதான். அதன்பின் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

எல்லாருக்கும் சம்பள உயர்வு.. ஒரே அறிவிப்பில் பல்டி அடித்த அரசு!
கடந்த சில தினங்களாக கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. எனவே, இதனால் கொரோனாவின் இரண்டாம் அலையின் தொடக்கத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

அடுத்த செய்தி