ஆப்நகரம்

உலகளவில் பெரிய ஷாக்; முரட்டுத்தனமா எகிறி அடிக்கும் இந்தியா!

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்படியொரு ஷாக் கொடுத்திருக்கிறது.

Samayam Tamil 6 Sep 2020, 5:48 am
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சமடையச் செய்கிறது. கடந்த சில மாதங்களாக மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா, நேற்றைய புதிய பாதிப்புகளின் மூலம் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது. இதன்மூலம் பிரேசில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதாவது நேற்று ஒரேநாளில் இந்தியாவில் சுமார் 90,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சம் தொட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 70,000ஐத் தாண்டியுள்ளது. அதாவது 10 நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Coronavirus in India


நேற்றைய தினம் இந்தியாவின் மொத்த பாதிப்பு 41 லட்சத்தை தாண்டியது. நேற்று இரவு 11 மணி நிலவரப்படி பிரேசிலில் 40,93,586 பேர் கோவிட்-19 பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். உலகின் வேறெந்த நாடுகளில் இல்லாத அளவிற்கு புதிய உச்சங்களை இந்தியா தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் அமெரிக்கா, பிரேசிலில் பதிவான பாதிப்புகளை விட இரண்டு மடங்கு இந்தியாவில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா அபாய கட்டத்தில் உள்ளதா?

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 89,690 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 41,05,930ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 20,489 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரேநாளில் பதிவான புதிய உச்சம் என்பது வேதனையளிக்கக் கூடிய விஷயம்.

இதேபோல் உத்தரப்பிரதேசம்(6,692 பேர்), கேரளா(2,655 பேர்), ஹரியானா(2,289), ஜம்மு காஷ்மீர்(1,251 பேர்), உத்தரகாண்ட்(950 பேர்), திரிபுரா(691 பெர்), மேகாலயா(182 பேர்) என 7 மாநிலங்கள் புதிய உச்சம் தொட்டுள்ளன. நேற்றைய தினம் தேசிய அளவிலான பலி எண்ணிக்கை 1,055 ஆகும். இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் 70,606ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 5வது நாளாக 1,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பலியாகி இருக்கின்றனர்.

அதேசமயம் கடந்த 10 நாட்களாக நாட்டின் சராசரி பலி எண்ணிக்கை 1,000ஆக உள்ளது. இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 22 சதவீதம் ஆகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக மாநிலங்களில் பலி விகிதம் 3 சதவீதத்திற்கும் கீழே சென்றுள்ளது. டெல்லியில் கடந்த 67 நாட்களில் இல்லாத அளவு 2,973 பேர் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

படுமோசமா இறங்கிய இந்தியா; இனிமே தான் உஷாரா இருக்கணும்!

மும்பையிலும் தொடர்ந்து நான்காவது நாளாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் நேற்றைய தினம் வரை 40 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் புதிதாக 10,825 பேர் பாதிக்கப்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 4,87,331ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி