ஆப்நகரம்

இப்படியொரு மோசமான சாதனை படைத்த இந்தியா- வெளியான ஷாக் ரிப்போர்ட்!

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா மோசமான சாதனையை படைத்துள்ளது.

Samayam Tamil 13 May 2020, 9:16 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களை ஒப்பிடுகையில் நேற்றைய தினம் குறைந்தபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. அதேசமயம் பலி 121 என்ற இரண்டாவது அதிகபட்ச உயர்வை சந்தித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 74,292 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24,453 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 2,415 பேர் பலியாகி இருக்கின்றனர். 47,420 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் பாதிப்பு எண்ணிக்கை 75,000ஐ தாண்டவுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்துள்ள சர்வதேச நாடுகளின் பட்டியலில் கனடாவை மிஞ்சி 12வது இடத்தை அடைந்துள்ளது.
Samayam Tamil கொரோனா வைரஸ் பாதிப்பு


சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. நேற்றைய தினம் இந்தியாவில் 3,543 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாட்களில் 3,613 மற்றும் 4,308 என பாதிப்பு இருந்துள்ளது. நேற்று மகாராஷ்டிராவில் 53 பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

பரவாலயே இந்தளவிற்கு குறைஞ்சிருக்கு - கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா?

இது முந்தைய நாளில் பதிவான அதிகபட்ச பலி எண்ணிக்கைக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் பதிவான மொத்த பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் மட்டும் 44 சதவீதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 7வது நாளாக 1,000 பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் புதிதாக 1,026 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 24,427ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 8.902 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் மும்பையில் மட்டும் 5,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றைய தினம் புதிதாக 716 பேருக்கு மேல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தொடர்ந்து 3வது நாளாக 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்19: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு - லேட்டஸ்ட் நிலவரம்!

இதன்மூலம் மொத்த பாதிப்பு 8,718ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 8 பேர் பலியானதன் மூலம் மொத்த பலி 61ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 112 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 24 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இதில் அகமதாபாத்தில் மட்டும் 21 பேர் அடங்குவர். டெல்லியில் அதிகபட்சமாக பலி எண்ணிக்கையாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு கடந்த சில நாட்களாக அதிகபட்ச பாதிப்பு பதிவாகி வருவது கவனிக்கத்தக்கது. அதாவது புதிதாக 406 பேருக்கு தொற்று ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 7,500ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் புதிதாக 201 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி