ஆப்நகரம்

முதல் முறை இந்தியா பாகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி!

வரும் செப்டம்பர் மாதம் இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

Samayam Tamil 30 Apr 2018, 12:47 am
வரும் செப்டம்பர் மாதம் இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
Samayam Tamil 398970-india-pakistanflags


ரஷ்யாவின் உரல் மலைப்பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் தீவிரவாத ஒழிப்பு ராணுவப் பயிற்சியைக் கூட்டாக மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முதல் முறையாக கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த உள்ளனர். செப்டம்பர் மாதம் நடக்க உள்ள இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளும் ஒன்றாக ராணுவப் பயற்சியில் பங்கேற்கின்றன.

அடுத்த செய்தி