ஆப்நகரம்

இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை ரத்து

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த கடலோரக் காவல் படை அதிகாரிகளின் வருடாந்திர பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNN 15 Apr 2017, 6:06 pm
புதுதில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த கடலோரக் காவல் படை அதிகாரிகளின் வருடாந்திர பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil india pakistan negotiation cancelled
இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை ரத்து


இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடல் எல்லைகள் பாதுகாப்பு, இரு நாடுகளின் மீனவர்களும் சர்வதேச எல்லையை தவறுதலாகக் கடக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய வேண்டிய நடைமுறைகள், மீட்பு நடவடிக்கைகள் என்பன உள்ளிட்ட கடல் சார் விஷயங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும், இரு நாட்டு கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை 16-ம் தேதி (நாளை) முதல் 19-ம் தேதி வரை தில்லியில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு குழு நாளை தில்லி வருவதாக இருந்தது.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் குழுவின் வருகையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது உகந்ததாக இருக்காது என்பதால், பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு ராணுவச் சட்டப் பிரிவு 59-ன் கீழும் அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழும் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
India - Pakistan Negotiation cancelled

அடுத்த செய்தி