ஆப்நகரம்

காசை பிடுங்கும் கர்நாடக தேர்தல்- தமிழகத்திற்கு மூன்றாவது இடம்

கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் அதிக செலவு செய்யப்பட்டு நடந்த முடிந்த தேர்தல்களில் கர்நாடக தேர்தல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Samayam Tamil 15 May 2018, 9:01 am
கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் அதிக செலவு செய்யப்பட்டு நடந்த முடிந்த தேர்தல்களில் கர்நாடக தேர்தல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
Samayam Tamil bengaluru-karnataka-image
இந்தியாவில் காஸ்டலி தேர்தல் களமான கர்நாடகம்


கர்நாடகா சட்டமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் நடந்து முடிந்த மாநில தேர்தல்களில், அதிகளவில் காசை பிடுங்கிய தேர்தலாக கர்நாடக சட்டமன்ற களம் அமைந்துள்ளது.

கர்நாடகா மாநில தேர்தல் களத்தை குறித்து, ’சென்டப் பார் மீடியா ஸ்டெடீஸ்’ என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அதில் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிகளவில் ரூ. 10,500 கோடி வரை செலவு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை செலவு செய்யப்பட்டதை விட இந்த தொகை இரண்டு மடங்கும் அதிகம் என ’சென்டப் பார் மீடியா ஸ்டெடீஸ்’ அமைப்பு கூறியுள்ளது.

மேலும் கர்நாடகாவில் பிரதமர் மோடி பல நாட்கள் தங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அவரது பிரச்சார செலவுகள் குறித்து சிஎம்எஸ் ஆய்வ்ல் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக நடந்து முடிந்த தேர்தலில், கர்நாடகா மாநில தேர்தலில் பிற மாநிலங்களை விடவூம் அதிகளவில் செலவு செய்யப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் கூறுகிறது. இது மேலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் சிஎம்எஸ் கூறுகிறது.

இதன்படி இந்தியாவில் அதிகச் செலவில் நடக்கும் மாநில தேர்தல்களில் முதல் இடத்தைக் கர்நாடகா பெற்றுள்ள நிலையில் டாப் 3 இடத்தை ஆந்திர பிரதேசம் 2வது இடத்தையும், தமிழ்நாடு 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

2014 பொதுத் தேர்தலில் 30,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது, இதை வைத்துப் பார்க்கும்போது 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50,000 -60,000 கோடி ரூபாய் வரையில் செலவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி