ஆப்நகரம்

இந்தியளவில் 21,000 கிராமங்களுக்கு விரைவில் எல்.பி.ஜி எரிவாயு இணைப்பு- மத்தியரசு திட்டம்

ராஜஸ்தான் மாநில கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் 85 சதவீத குடும்பத்தினர், விறகு அடுப்பு பயன்படுத்துவதை விடுத்து எல்.பி.ஜி எரிவாயு இணைப்பிற்கு மாறியுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Apr 2018, 10:45 am
ராஜஸ்தான் மாநில கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் 85 சதவீத குடும்பத்தினர், விறகு அடுப்பு பயன்படுத்துவதை விடுத்து எல்.பி.ஜி எரிவாயு இணைப்பிற்கு மாறியுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil smoke-free-india


கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜஸ்தானில் வாழும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் 66 சதவீத குடும்பத்தினர் மட்டுமே முன்னதாக எல்.பி.ஜி இணைப்பை பெற்றிருந்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு ராஜஸ்தான் கிராமப்புற பகுதிகளில் ’பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா’ திட்டத்தின் கீழ் புதியதாக 26 லட்சம் குடும்பங்களுக்கு எல்.பி.ஜி இணைப்பை மத்தியரசு வழங்கியது. அதன்படி தற்போது கேஸ் அடுப்பை பயன்படுத்திவோரின் எண்ணிக்கை அம்மாநிலத்தில் 85 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுதவிர, வரும் மே-5ம் தேதிக்குள் ராஜஸ்தானில் மேலும் 599 கிராமங்களை புகை மண்டலம் அற்ற பகுதிகளாக அறிவிக்க மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முனைந்துள்ளது. இதற்காக அப்பகுதிகளில் வாழும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு எல்.பி.ஜி எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக 2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்பின் படி சமூகத்தில் பின் தங்கிய குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.1600 வரை மத்தியரசு மானியமாக வழங்கவுள்ளது.

இந்தியாவில் விறகு அடுப்பு பயன்பட்டால் காற்றுமாசு அதிகரித்து வருகிறது. இதை குறைக்கும் நோக்கில் தான் தற்போது மத்தியரசு ’பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா’ திட்டத்தின் கீழ் எல்.பி.ஜி எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு, இணைப்பை வழங்கி வருகிறது.

புதிய எல்.பி.ஜி எரிவாயு இணைப்பிற்காக ராஜஸ்தானின் 599 கிராமங்கள் உட்பட இந்தியளவில் மொத்தம் 21,000 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டுகளில் இந்தியளவில் புதியதாக எல்.பி.ஜி எரிவாயு இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது என பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி