ஆப்நகரம்

மலபாரில் மூன்று நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி: உற்றுநோக்கும் சீனா

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கடற்படைகள் இணைந்து மலபாரில் கூட்டாக ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

TNN 10 Jul 2017, 12:52 pm
சென்னை: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கடற்படைகள் இணைந்து மலபாரில் கூட்டாக ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.
Samayam Tamil india us and japan kick start malabar naval drill today as china watches
மலபாரில் மூன்று நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி: உற்றுநோக்கும் சீனா


மலபார் கடற்படை பயிற்சி என்ற பெயரில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கடற்படைகள் இணையும் கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் மட்டுமே இணைந்து மேற்கொண்ட இந்த கூட்டுப்பயிற்சியில் இந்த ஆண்டு முதல் ஜப்பானும் நிரந்தர உறுப்பினராகியுள்ளது.



இதற்காக மூன்று நாடுகளில் இருந்தும் 15 போர்க் கப்பல்கள், இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏராளமான ஜெட் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை இந்த பயிற்சிக்காக வங்கக்கடல் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியப் பெருங்கடலில் சீனா தனது ஆக்கிரமிப்பைச் செலுத்த முயலும் சூழலில் மூன்று நாடுகளும் கூட்டாக ராணுவப் பயிற்சி மேற்கொள்வதை சீனா ராணுவமும் உற்றுநோக்கி வருகிறது.



கடந்த இரண்டு மாதங்களில் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் அடிக்கடி ஊடுருவி வருவதால் இந்தக் கூட்டுப் பயிற்சி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறுது.

மலபார் கடற்படைப் பயிற்சி இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி