ஆப்நகரம்

இந்தியா-வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே புதிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

Samayam Tamil 3 Mar 2018, 4:14 pm
பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே புதிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
Samayam Tamil india vietnam vow to jointly work for open indo pacific
இந்தியா-வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!


வியட்நாம் அதிபர் தாய் குவாங், 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துளார். அவருடன் அவரது மனைவி ஹியான் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளும் இந்தியா வந்துள்ளனர். பீகார் மாநிலம் புத்த கயாவில் மகாபோதி கோயிலில் வழிபாடு செய்த வியட்நாம் அதிபருக்கு, இன்று ராஷ்டிரபவனில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

Delhi: Exchange of agreements between India and Vietnam. pic.twitter.com/7Gt2C0Ihrb — ANI (@ANI) March 3, 2018 பின்னர், வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் - பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையில் அணுசக்தி ஒத்துழைப்பு, ராணுவம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வர்த்தகம், வேளாண்மை உள்ளிட்ட புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘இந்திய, பசிபிக் துணைக்கண்டத்தின் வளமையும், சுதந்திரமும் மேலோங்கும் வகையிலும், இறையாண்மையும், சர்வதேச சட்டங்களும் மதிப்புடன் பாதுகாக்கப்படும் வகையிலும் வியட்நாமும் இந்தியாவும் இணைந்து செயல்படும்’ என்று கூறினார். பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு வியட்நாம் சென்றார். அப்போது இரு நாடுகளுக்கிடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி