ஆப்நகரம்

1962 போரில் வென்றது இந்தியாதான்! 8ஆம் வகுப்பு பாடநூலில் குளறுபடி!

1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போரில் இந்தியா வென்றதாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பள்ளி பாடநூலில் இடம்பெற்றுள்ளது.

TNN 10 Aug 2017, 8:11 am
1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போரில் இந்தியா வென்றதாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பள்ளி பாடநூலில் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil india won 62 war says mp sanskrit textbook
1962 போரில் வென்றது இந்தியாதான்! 8ஆம் வகுப்பு பாடநூலில் குளறுபடி!


1962ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சியில் இந்தியா - சீனா இடையே போர் மூண்டது. இந்தியச் சீனப் போர் என்று குறிப்பிடப்படும் இப்போரில் சீனா வென்றது. ஆனால், இப்போரில் சீனா வென்றதாக மத்தியப் பிரதேச பள்ளி பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான 'சுக்ரிதிகா' என்ற சமஸ்கிருத பாடநூலின் மூன்றாம் பாகத்தில் ஜவஹர்லால் நேரு பற்றிய பாடப்பகுதியில் இந்த தவறான தகவல் இடம்பெற்றுள்ளது. ஜவஹர்லால் நேருவின் திறமையான நடவடிக்கையால் சீனாவை இந்தியா போரில் வீழ்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பாடநூலை எழுதிய ஐந்து பேரில் மது சிங், லலிதா செங்கர் மற்றும் நிஷா குப்தா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர். உமேஷ் பிரசாத் ரஸ்தோகி, சோம்தத் சுக்லா ஆகியோர் இறந்துவிட்டனர். இந்நூலை லக்னோவைச் சேர்ந்த க்ரிதி பிரகாஷன் பிரைவேட் லிமிட்., நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி