ஆப்நகரம்

ஐஐடி மாணவிக்கு விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை!

உத்தரப்பிரதேசத்தில் ஐஐடி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிடான்ஷீ என்ற விமானப்படை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Jan 2018, 5:08 am
உத்தரப்பிரதேசத்தில் ஐஐடி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிடான்ஷீ என்ற விமானப்படை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil indian air force man allegedly raped iit kanpur student
ஐஐடி மாணவிக்கு விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை!


பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி சிடான்ஷீ- வுக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ஐஐடி தொழில்நுட்ப கல்லூரயில் படித்து வரும் மாணவி ஒருவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் காதலாக மாற, சிடான்ஷூ, ஐஐடி விடுதிக்கு சென்று அந்த மாணவியை பலமுறை ரகசியமாக பார்த்து வந்தார். தொடர்ந்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து, அந்த மாணவியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த மாணவி, சிடான்ஷூ மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விமானப்படை அதிகாரி சிடான்ஷூ மீத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி