ஆப்நகரம்

பிபின் ராவத் மரணம்.. ஹெலிகாப்டர் விபத்துக்கு இதுதான் காரணம்!

மேகங்களுக்குள் நுழைந்ததால் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Jan 2022, 11:33 pm
இந்தியாவின் முன்னாள் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil Bipin rawat helicopter crash


விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விசாரணையில் கிடைத்த ஆரம்பகட்ட தகவல்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், மேகம் சூழ்ந்த இடத்துக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததன் விளைவாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திர கோளாறுகள், திட்டமிட்ட சதி, கவனக் குறைவு ஆகியவற்றால் விபத்து ஏற்படவில்லை எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

‘போடா டேய்’.. தமிழ் பற்றி ஆனந்த் மகிந்த்ரா பெருமிதம்!
விசாரணை அறிக்கையில், “இயந்திர கோளாறு, திட்டமிட்ட சதி, கவனக் குறைவு ஆகிய காரணங்களால் விபத்து ஏற்படவில்லை என விசாரணை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பள்ளத்தாக்கில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாரா மாற்றத்தால், மேகங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டரில் கிடைத்த கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்த பிறகும், எல்லா சாட்சிகளிடமும் விசாரணை நடத்திய பிறகும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி