ஆப்நகரம்

இந்திய ஹெலிகாப்டரை இந்திய ராணுவமே சுட்டு வீழ்த்தியது.! தவறு நடந்துவிட்டதாக ஐஏஎப் அதிகாரி வருத்தம்..

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான Mi-17 V5 ரக ஹெலிகாப்டரை தவறுதலாக நம்ம விமான படையே சுட்டு வீழ்த்தியது அம்பலமாகியுள்ளது.

Samayam Tamil 4 Oct 2019, 3:35 pm
கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்திய விமான படைக்கு சொந்தமான Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் ஸ்ரீநகர் அருகே உள்ள புட்கம் என்ற பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விபத்தில் 6 விமான படைவீரர்களும் சிவிலியன் ஒருவரும் உயிரிழந்தனர்.
Samayam Tamil 3


இந்த விபத்தானது புல்வாமா தாக்குதல் நடந்த நாட்களில் தான் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பாலகோட் பகுதியில் ஊடுருவியிருந்த தீவிரவாதிகளின் முகாம்களை தகர்க்க, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.


இந்த தாக்குதலுக்கு அடுத்த நாளில்தான் இந்திய ராணுவ ஹெலிகாப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விபத்தை குறித்தான விசாரணையில் இந்திய விமான படையினரின் தவறுதலாக தாக்கியதில் Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது தெரிந்துள்ளது.

இது குறித்து ஐஏஎப் அதிகாரி ராகேஷ் குமார் சிங் கூறுகையில்.. பெரும் தவறு நடந்துவிட்டது. அதை நான் ஏற்று கொள்கிறேன். விபத்து ஏற்பட்ட நாட்கள் தீவிரவாதிகள் குறித்து பதற்றம் நிலவி வந்ததால், Mi-17 V5 ரக ஹெலிகாப்டரை, ஏவுகணை என்று விமான படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சம்மந்தப்பட்ட இரு அதிகாரிகள் மீதான விசாரணை நடந்து முடிந்தது. அவர்கள் மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேலும் சட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்போம் என கூறினார்.

அடுத்த செய்தி