ஆப்நகரம்

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை அழித்த இந்திய ராணுவம்!

எல்லை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம்களை அழித்து இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

TNN 30 Oct 2016, 5:59 pm
எல்லை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம்களை அழித்து இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
Samayam Tamil indian army attacked pakistan army base
பாகிஸ்தான் ராணுவ முகாம்களை அழித்த இந்திய ராணுவம்!


ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் எல்லைத்தாண்டி சர்ஜிகல் ஸ்டிரைக் எனும் பதில் தாக்குதலை நடத்தினர். இதில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உரி தாக்குதலுக்கு பிறது இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலே நிலவி வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு குப்வாரா மாவட்டத்திற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசி எறிந்துவிட்டு சென்றனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் ஹெரன் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைப்பகுதியில் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

அடுத்த செய்தி