ஆப்நகரம்

வலியால் துடித்த கர்ப்பிணி; ஓடும் ரயில் ஓடிவந்த ராணுவ மருத்துவர்கள்!

ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணிற்கு ராணுவ மருத்துவர்கள் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Dec 2019, 12:44 pm
ரயில் பயணங்கள் என்றுமே அலாதியானது. பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ரயில் பயண நட்பு, நிகழ்வுகள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக மாறிய சூழல்களும் இருக்கின்றன.
Samayam Tamil Baby


அப்படியொரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் விரைவில் குழந்தை பிறந்துவிடும் என்ற நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த வாட்டி மழையல்ல, கடுங்குளிர்; ஒட்டுமொத்தமா உறைந்து போன ஏரி!

வட இந்திய மாநிலங்களில் பனிமூட்டம் நிலவி வருவதால் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அடுத்த ரயில் நிலையம் வர இன்னும் நேரம் இருந்துள்ளது. இதனால் செய்வதறியாது அவரது குடும்பத்தார் தவித்துள்ளனர். இந்த தகவல் அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் ஆகியோருக்கு தெரியவந்தது.

காரைத் தடுத்த உ.பி. போலீஸ்... ஸ்கூட்டரில் சென்று கெத்து காட்டிய பிரியங்கா காந்தி

அவர்கள் விரைந்து வந்தனர். உடனே அப்பெண்ணிற்கு பிரசவம் பார்க்கும் பணிகளை மேற்கொண்டனர். இதில் ரயிலிலேயே அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் நெகிழ்ச்சிகரமான ஒன்றாக அமைந்துள்ளது.

இதுபற்றி இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ”தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். தேசத்திற்கு தான் எங்கள் முதல் சேவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது தேசிய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய முதல்வர்- இன்று கோலாகலமாக நடைபெறும் பதவியேற்பு!

அடுத்த செய்தி