ஆப்நகரம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு ராணுவம் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது

Samayam Tamil 19 Nov 2020, 10:35 pm
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இரவு ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரியில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தின் மீது திடீரென ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்த இந்திய ராணுவ சிறப்புப் படை செப்டம்பர் 28ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி 29ஆம் தேதி அதிகாலை வரை நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, எல்லை வழியாக சமீப நாட்களாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம் போட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் ட்ரக்கில் பயங்கரவாதிகள் பதுங்கல்; தாறுமாறு என்கவுன்ட்டர் - பலே திட்டம் க்ளோஸ்!

இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத நிலைகள் மீது இந்திய ராணுவத் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஊடுருவல் அதிகமாக இருந்த நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

ராணுவம் அறிக்கை



இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கி சூடு நடைபெறவில்லை என்று விளக்கமளித்துள்ளது. கடந்த 13ஆம் தேதி அரங்கேறிய அத்துமீறலை பகுப்பாய்வு செய்தி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூடு எதுவும் நடைபெறவில்லை என்றும் இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.

அடுத்த செய்தி