ஆப்நகரம்

பாக்க டம்மினு நினைக்கிறியா? அடி ஒவ்வொன்னும் இடி மாறி விழும்; தயாரான இந்திய ராணுவம்!

இந்திய ராணுவம் எத்தகைய தாக்குதலுக்கும் தயாராக உள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

TNN 20 Oct 2017, 7:44 pm
ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் எத்தகைய தாக்குதலுக்கும் தயாராக உள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil indian army is ready for everything says jitendra singh
பாக்க டம்மினு நினைக்கிறியா? அடி ஒவ்வொன்னும் இடி மாறி விழும்; தயாரான இந்திய ராணுவம்!


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முண்டாசீர் என்ற குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மோடி தலைமையிலான மத்திய அரசு முதியவர்கள் பிரச்சனைக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அனைத்து முதியவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் சமூகமாக இந்தியா விரைவில் மாறும். தீவிரவாதம் தொடர்பான பிரச்சனைகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டு வருகிறது.

எல்லையில் எந்தவித அச்சுறுத்தலையும் இந்திய ராணுவம் சமாளிக்கும். சிறப்பாக பணியாற்றி வரும் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மற்றும் ராணுவத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஜிதேந்திர சிங் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார்.

Indian army is ready for everything says Jitendra Singh.

அடுத்த செய்தி