ஆப்நகரம்

இது எங்க ஏரியாடா; சீனா மிரட்டியும், எல்லையில் டெண்ட் போட்ட இந்தியா ராணுவம்...!

சீன எல்லை அருகே டெண்ட் போட்டு, இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

TNN 10 Jul 2017, 8:36 am
கேங்க்டாக்: சீன எல்லை அருகே டெண்ட் போட்டு, இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil indian army made camps in china border
இது எங்க ஏரியாடா; சீனா மிரட்டியும், எல்லையில் டெண்ட் போட்ட இந்தியா ராணுவம்...!


இந்திய - சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளை, தங்களுடையது என்று கூறி, சிலவற்றின் பெயர்களையும் மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்தியப் பகுதிகளுடனான சீன வரைபடத்தை வெளியிட்டு, மத்திய அரசின் கோபத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்தியா - சீனா - பூட்டான் நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணிகளை இந்தியா தடுத்தது.

இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்தியாவின் 2 பதுங்கு குழிகளை அழித்தது. இதனைத் தொடர்ந்து சீன எல்லையில், 3000 வீரர்களை இந்தியா குவித்துள்ளது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக இந்திய ராணுவத்தை திரும்ப பெறுமாறும், இல்லையென்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஆனால் இந்தியா, டோக்லாம் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளது. இதனால் இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

Indian army made camps in China Border.

அடுத்த செய்தி