ஆப்நகரம்

ராணுவ வீரர்கள் உயிர்ப்பலி அதிகரிக்கும், சீனா 43 பேரை இழந்துள்ளது?

இந்திய-சீன ராணுவத்தினர் அடித்துச் சண்டையிட்டுக் கொண்ட விவகாரத்தில் உயிர்ப்பலி உயரும் என அச்சம்...

Samayam Tamil 17 Jun 2020, 11:51 am
இந்திய எல்லைப் பகுதியில் இந்திய-சீன எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதில் இதுவரை 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்

கோப்புப்படம்



இந்தியாவின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவம் இரு தினங்களுக்கு முன் கட்டை கம்புகளைக் கொண்டு தாக்கிக் கொண்டது. இதன் காரணமாக இருநாடும் தங்கள் ராணுவ வீரர்கள் பலரை இழந்துள்ளது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நம் நாட்டை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். முதலில் 3 என வெளியான உயிர்ப் பலி எண்ணிக்கை நேற்று இரவு 20ஆக உயர்ந்தது.

இந்தியா-சீனா மோதல்... மொத்தம் 20 பேர் வீரமரணம்!

இந்த சண்டை நடந்த பகுதியில் ஆக்ஸிஜன் குறைந்து காணப்படும் பகுதி. ஆம் அந்தப் பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகக் காணப்படும். இதனால் காயமடைந்த வீரர்கள் சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது.

20 ராணுவ வீரர்கள் மரணம் என்ற செய்தி வெளியான சூழலில் இப்போது இந்த உயிர்ப் பலி உயரக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தரப்பில் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி