ஆப்நகரம்

விரைவில் ராணுவக் காவல் படையில் எண்ட்ரி கொடுக்கும் பெண்கள்; கெத்து...!

ராணுவக் காவல் படையில் விரைவில் பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

TNN 11 Jun 2017, 6:05 am
டேராடூன்: ராணுவக் காவல் படையில் விரைவில் பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
Samayam Tamil indian army to appoint woman in military police
விரைவில் ராணுவக் காவல் படையில் எண்ட்ரி கொடுக்கும் பெண்கள்; கெத்து...!


ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பணியாற்றுவது, பல்வேறு நாடுகளில் செயல்முறையில் உள்ளது. அதேபோல் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ராணுவத்தில் மருத்துவம், பொறியியல், கல்வி உள்ளிட்ட துறைகளில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரர்களின் பாசிவ் அவுட் பரேட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ராணுவத் தளபதி பிபின் ராவத் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் போராட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் பெண் போராட்டக்காரர்களும் ஈடுபடுவதைச் சுட்டிக் காட்டினார்.

ஆண் போராளிகளை ராணுவ வீரர்கள் தடுத்து விடுகின்றனர். ஆனால் பெண் போராளிகளை தடுக்க முடியாது. இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், விரைவில் ராணுவக் காவல் படையில் பெண்கள் சேர்க்கப்படுவர் என்றும் கூறினார். இந்த முயற்சி வெற்றி பெற்றால், திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் பிபின் ராவத் தெரிவித்தார்.

Indian army to appoint woman in military police.

அடுத்த செய்தி