ஆப்நகரம்

மதுபோதையில் செல்பி எடுக்க முயன்ற தம்பதி மரணம்!

அமெரிக்காவில் மலை உச்சிக்கு சென்று செல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்த இந்திய தம்பதி, மது போதையில் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 24 Jan 2019, 1:48 pm
அமெரிக்காவில் மலை உச்சிக்கு சென்று செல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்த இந்திய தம்பதி, மது போதையில் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
Samayam Tamil download (3)


கேரள மாநிலம், செங்கானுரை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் விஷ்ணு விஸ்வநாத் (வயது 29). இவரது மனைவி மீனாட்சி மூர்த்தி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ இந்தியா நிறுவனத்தில் விஷ்ணு வேலை பார்த்து வந்தார். கணவனும், மனைவியும் மலையேற்ற பயிற்சியில் மிக ஆர்வம் கொண்டவர்கள்.

கடந்த அக்டோபர் 25ம் தேதி அமெரிக்காவின் யோஷ்மைட் தேசிய பூங்காவுக்கு இவர்கள் சுற்றுலா சென்றனர். அங்குள்ள 800 அடி உயர மலை உச்சிக்கு சென்ற அவர்கள், அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட நினைத்தனர்.

இதற்காக அவர்கள் மலை உச்சிக்கு சென்ற செல்பி எடுக்க முயன்றபோது, 800 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் இவர்கள் தவறி விழுந்து இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களின் சடலங்களை கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இருவரும் விபத்துக்கு முன்பாக மது அறுந்தியிருந்தது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி