ஆப்நகரம்

இந்தியாவின் பன்முகத்தன்மை கூறித்து பெருமையடைகிறேன்: நரேந்திர மோடி

இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து தான் அதிகம் பெருமையடைவதாக பிரதமர் மோடி , டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய பண்பாடு தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Mar 2018, 6:34 pm
இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து தான் அதிகம் பெருமையடைவதாக பிரதமர் மோடி , டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய பண்பாடு தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil indian democracy a celebration of our age old plurality pm modi
இந்தியாவின் பன்முகத்தன்மை கூறித்து பெருமையடைகிறேன்: நரேந்திர மோடி


மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா இந்தியா வந்துள்ளார். ’இஸ்லாமிய பாரம்பரியம்: நவீன மயமும் ’என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடியும் மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் கலந்துகொண்டனர் .
#WATCH Live from Delhi: PM Modi & King Abdullah II of Jordan at Vigyan Bhawan https://t.co/N78mrddEMh — ANI (@ANI) March 1, 2018 அப்பொழுது பிரதமர் மோடி பேசியதாவது, “உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் இந்தியாவில் காண முடியும் . புத்தர் முதல் காந்திவரை அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் . அவர்கள் இருவருமே உலக அமைதியை நிலைநாட்ட நினைத்தனர்.

தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதலை, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானதாக யாரும் பார்க்க வேண்டாம். ஆனால் இந்த கருத்தை இன்றைய இளைஞர்கள் தவறாக புரிந்துகொள்கின்றனர்.

இஸ்லாமிய இளைஞர்கள் ஒரு கையில் குரான் மற்றும் இன்னொரு கையில் கணினியை பயன்படுத்தினால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடையும். இந்தியாவின் பன்முகத்தன்மை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி