ஆப்நகரம்

அமெரிக்காவில் இந்தி, சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் இந்தியா

அமெரிக்காவில் இந்தி, சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தில் இலவச வகுப்புகள் மேற்கொள்ள இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 13 Oct 2018, 7:47 pm
அமெரிக்காவில் உள்ளி இந்திய தூதரகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழி இலவசமாக கற்று கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil Sanskrit


இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை அமெரிக்காவில் பிரபலப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபடவுள்ளது. அதன்படி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை கற்பிக்க சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இது தொடா்பாக வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரக இந்திய கலாசார மற்றும் பண்பாட்டு ஆசிாியா் மோக்ஸ் ராஜ் கூறுகையில், அமெரிக்காவில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் வகையில் இரு மொழிகளையும் கற்று கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாரத்தில் ஒரு நாள் இந்தியும், மற்றொரு நாள் சமஸ்கிருதமும் இலவசமாக கற்று கொணடுக்கப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதன்படி செவ்வாய்க் கிழமை இந்தியும், வியாழன் கிழமை சமஸ்கிரத வகுப்புகளும் நடத்தப்படும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி