ஆப்நகரம்

குழந்தை அழுததால் பிரிட்டிஷ் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட இந்தியா்கள்

3 வயது குழந்தை தொடா்ந்து அழுததால் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இந்திய தம்பதி இறக்கி விடப்பட்டுள்ள சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 9 Aug 2018, 11:56 am
3 வயது குழந்தை தொடா்ந்து அழுததால் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இந்திய தம்பதி இறக்கி விடப்பட்டுள்ள சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil British Airways


லண்டனில் இருந்து பெர்லின் செல்லும் பிரிட்டிஷ் ஏர் லைன்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் இந்திய தம்பதி தனது 3வயது குழந்தையுடன் ஏறியுள்ளனா். அப்போது 3வயது குழந்தை தொடா்ந்து அழுததால் ஆத்திரமடைந்த விமான பணியாளா்கள் இந்திய தம்பதியை கீழே இறக்கிவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட இந்திய தம்பதி பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், “லண்டன் – பெர்லின் விமானத்தில் 3 வயது குழந்தையுடன் நாங்கள் ஏறினோம். விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுமாறி அறிவிக்கப்பட்டது. எனது 3 வயது குழந்தைக்கு எனது மனைவி சீட் பெல்ட் அணிவித்தாா். சீட் பெல்ட் அணிந்ததும் குழந்தை அழத் தொடங்கியது.

குழந்தையை தூக்கி அதன் அழுகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் எனது மனைவி ஈடுபட்டாா். ஆனால் குழந்தை தொடா்ந்து அழுதது. அப்போது அங்கு வந்த விமான பணியாளா் ஒருவா் குழந்தையை அதட்டத் தொடங்கினாா். அதில் பயந்த குழந்தை மேலும் அழத் தொடங்கியது. அருகில் இருந்த வேறு சில இந்தியா்கள் குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்த முயற்சித்தனா். இருப்பினும் குழந்தை அழுதுகொண்டே இருந்தது.

மீண்டும் வந்த பணியாளா் அழுகையை நிறுத்தவில்லை என்றால் குழந்தையை விமானத்தில் இருந்து வெளியில் எறிந்து விடுவதாக மிரட்டினாா். இதனைத் தொடா்ந்து நாங்கள் குழந்தையுடன் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டேன். எங்களுக்கு உதவி செய்த மற்றொரு இந்திய குழுவும் இறக்கி விடப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளாா். மேலும் எங்களிடம் இனம் தொடா்பாக பிரிவினை காட்டப்படடதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி