ஆப்நகரம்

இந்திய உயர் அதிகாரிகள், பாகிஸ்தானில் மாயம்!

இஸ்லாமாபாத்தில் அரசுப் பணி காரணமாக வெளியே சென்றவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை...

Samayam Tamil 15 Jun 2020, 12:38 pm
பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய உயர் அதிகாரிகள் 2 பேரைக் காணவில்லை. இது தொடர்பாகத் தீவிர விசாரணையை இருநாடுகளும் நடத்தி வருகிறது.
Samayam Tamil இந்திய உயர் அதிகாரிகள், பாகிஸ்தானில் மாயம்!
இந்திய உயர் அதிகாரிகள், பாகிஸ்தானில் மாயம்!


பாகிஸ்தான் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளை இன்று காலை முதல் காணவில்லை எனப் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகத்திற்குக் காலை புறப்பட்ட 2 பேர் எங்குத் தூதரகம் வந்தடையவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே இந்த விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன் இந்தியாவின் பணிகளை உளவு பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவிலிருந்த பாகிஸ்தான் தூதர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

அப்போதிலிருந்தே இஸ்லாமாபாத்திலிருந்த இந்திய தூதர்களுக்கு வெளியிலிருந்து மிரட்டல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே வேளையில் தூதர்கள் நாடு கடத்தப்பட்டதற்குப் பாகிஸ்தான் என்ன பதிலடி தரப்போகிறது என இந்தியாவும் எதிர்நோக்கிக் காத்திருந்தது.

அதிகாரிகள் மாயமானது குறித்த தகவல் மட்டுமே வெளியான நிலையில், என்ன நடந்தது என்பது குறித்து இப்போதுவரை எந்த அறிக்கையும் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளிடையே போர் சூழல் உருவாகி தணிந்திருந்த நிலையில், அதிகாரிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி