ஆப்நகரம்

கொரோனா பரவ மோடிதான் காரணம்.. இந்திய மருத்துவ சங்கம் குற்றச்சாட்டு!

கொரோனா வேகமாக பரவ மோடி நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மிகப்பெரிய காரணம் என இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 27 Apr 2021, 10:37 pm

ஹைலைட்ஸ்:

  • கொரோனா பரவலுக்கு மோடிதான் காரணம்
  • இந்திய மருத்துவ சங்க துணைத் தலைவர் குற்றச்சாட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil modi
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை இவ்வளவு தீவிரமடைய பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் நவ்ஜாத் தஹியா, “கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மத்தியில் பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டங்களை பிரதமர் மோடி நடத்தினார். கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என மக்களுக்கு புரியவைக்க மருத்துவ ஊழியர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று எல்லா திசையிலும் மக்கள் கூட்டத்தை காணமுடிகிறது. கொரோனா நெருக்கடியை மீறி கும்ப மேளாவும், தேர்தல் கூட்டங்களும் தொடர்ந்தன.

ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் மரணம்.. மருத்துவர்கள் வேதனை!
மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி கொரோனா பரவுவதற்கு பிரதமர் மோடி காரணமாகிவிட்டார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளும், ஆம்புலன்ஸ் கூட்டங்களும் வெளிப்படையாக தெரிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி