ஆப்நகரம்

இந்தாண்டு பருவமழை கொட்டோ... கொட்டுன்னு... கொட்டும்: வானிலை மையம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இந்த ஆண்டில் பருவமழை நன்றாகவும், பரவலாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 15 Apr 2019, 8:25 pm
கடந்தாண்டு நாட்டின் ஒரு பகுதி வறட்சியினாலும், மற்ற இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவும், பரவலாகவும் இருக்கு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil இந்தாண்டு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்- வானிலை மையம்
இந்தாண்டு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்- வானிலை மையம்


உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் வானிலையில் மிகப்பெரிய மாற்றம் நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளில் தொடர் மழை, மற்ற நாடுகளில் கடும் வறட்சியும் ஏற்பட்டுள்ளது.

இதே நிலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நீடிக்கிறது. அண்மையும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும், கேரளாவிலும் ரெட் அலர்ட் விடும் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. ஆனால் அதே சமயத்தில் தமிழகம், மஹாராஷ்டிரம் உட்பட சில மாநிலங்களில் பயிர்கள் வாடியும் மக்கள் தாகத்துடன் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

நிலத்தடி நீராதாரமும் வற்றிப்போவதால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தாக்கத்தால் பரிதவித்து வருகின்றனர். இதனால் விவசாயத் துறையிலும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என மக்கள் அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், வேதனையில் வாடும் நம் நாட்டின் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ‘இந்த ஆண்டில் பருவமழை நன்றாகவும், பரவலாகவும் இருக்கும்' என்னும் மகிழ்ச்சியான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டில் சம்பா சாகுபடி (ஆடிப்பட்டம்) செய்யும் விவசாயிகள் நல்ல பலனை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி